அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லீம் காங்கிரஸுடன், தமிழரசுக்கட்சி தலைவர்கள் இரகசிய ஒப்பந்தம்! – பிள்ளையான்

வடக்கு அரசியல்வாதிகளின் சித்தாந்த போக்கை மாற்றியமைத்து அவர்களுக்கு கிழக்கிலும் ஒரு அரசியல் நிலைபாடு காணப்படுகிறது என்ற விடயத்தை பாடமாக புகட்டவேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மட்டக்களப்பு தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், கடந்த 14 ஆம் திகதி முஸ்லீம் காங்கிரஸுடன் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஒப்பந்தத்தை செய்திருந்தது என இதன்போது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறியுள்ளார்.

அவ்வாறெனில் கிழக்கு மக்களுக்கு தெரியாமல் வடக்கின் தலைவர்கள் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளமை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பெட்டிப் பாம்பு அரசியல் நடத்தும் அலியும் தாவூத்தும் அறிக்கைகள் மூலம் வெளிப்பாடு!!!!

wpengine

மன்னார் மாவட்டத்தில் ஜ.த.தே. கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து சபை அமைக்கும் என நம்புகின்றோம். – சாள்ஸ் நிர்மலநாதன்.

Maash

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Maash