பிரதான செய்திகள்

முஸ்லிம், தமிழ் சமூக உறவை சீரழிக்க நினைக்கின்ற கருணா- ஹாபீஸ் நசீர்

முஸ்லிம் சமூகத்தை அழிக்க தலைமை தாங்கிய கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் கிழக்கில் இனப்படுகொலை செய்து முஸ்லிம் சமூகத்தை அழிக்க கருணா தலைமை தாங்கினார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது கருணா முஸ்லிம்களைப் பற்றி வெளியிடும் கருத்துக்களின் மூலம் ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது.

அதாவது கருணா ஆயுத பலத்தோடு இருந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது எவ்வாறு இனப்படுகொலைகளை செய்திருப்பார் என்பது தெரிவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மற்றும் தமிழ் சமூக உறவை சீரழிக்க நினைக்கின்ற கருணா போன்றவர்களுக்கு காலம் தக்க பதிலளிக்கும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

Related posts

சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக முஸ்லிம்

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமிழ் கூட்ட‌மைப்பை கண்டிக்க வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

wpengine

புரெவி புயல் யாழ்ப்பாணத்தில் 456குடும்பங்கள் பாதிப்பு

wpengine