பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசாங்க அதிபர் தலைமையில் தைபொங்கள் வவுனியாவில்

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாட்டு பொங்கல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கல் தினமான நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த பொங்கல் நிகழ்வானது இன்று காலை மாவட்ட செயலக முன்றலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குட்செட் கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகர குருக்கள் கலந்து கொண்டு விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டிருந்தார்.

குறித்த பொங்கல் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா மற்றும் அரச திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தினர் மலேசிய பேராசியர்கள் சந்திப்பு.

wpengine

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை, வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில்.

Maash

விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யவேண்டும் -பொதுபல சேனா மகஜர்

wpengine