அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் SLMC வேட்பாளர் M.L. ஷியாப்தீன் (JP) ACMC இல் இணைந்துகொண்டார்.

கிண்ணியா பிரதேச சபை ஆயிலியடி வட்டார முன்னாள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் சகோதரர் M.L. ஷியாப்தீன் (JP) அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கௌரவ பாரளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அரசியல் அதிகார உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி Dr. ஹில்மி மஹ்றூப், Dr. ஹில்மி முஹைதீன் (MOH), திருகோணமலை மாவட்ட செயற்குழு செயலாளருமான விவசாய போதனாசிரியர் E.L. அனீஸ், ஆயிலியடி வட்டார வேட்பாளர் சகோதரி ரிஸ்வானா முகம்மது கியாஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/-அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

wpengine

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கி முகாமையாளர் அனுப்பிய செய்தி

wpengine

சாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா?

wpengine