பிரதான செய்திகள்

முன்னால் உறுப்பினர்களுக்கு வெளிவந்த ஆப்பு

கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் வாகனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டுமென பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் பதவிக் காலம் முடிவடைந்த மாகாணசபைகளின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

வாகனங்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்களையும் மாகாணசபைகள் மீள ஒப்படைக்க வேண்டுமென பெபரல் அமைப்பு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
மாகாண ஆளுனர்கள் மற்றும் மாகாணசபை செயலாளர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாகாணசபை தேர்தல்களுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பு

wpengine

மன்னாரில் 5 எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

wpengine

உள்ளூராட்சி அதிகாரசபைகள் சட்டமூலம் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்.

Maash