இன்றைய தினம் 26/2/2022 மன்னார்-முசலி பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அவர்களும் மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஸ்டேன்லி டிமல், முசலி பிரதேச செயலாளர் ராஜு, மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.
சுமார் 55மில்லியன் பெறுமதியான நிதியை ISRC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சகோதர் மிஹ்லார் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொடுத்தார்.
பிரதேசத்தில் காணப்பட்ட பல குறைபாடுகளை ஆளுனரிடம் மக்கள் எத்தி வைத்தனர்.



