பிரதான செய்திகள்

முசலி அல்லிராணி கோட்டை பகுதியில் கேரள கஞ்சா

மன்னார் -அரிப்பு பகுதியான அல்லி ராணி கோட்டை கடற்கரை  பகுதியில் கேரள கஞ்சாவுடன் மீனவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

கைதுசெய்யப்பட்ட மீனவரிடம் இருந்து 139.5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 39 இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மீனவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் சிலாவத்துறை பொாலீஸ் நிலைய அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு வினவிய போது இது தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும்  மன்னார் பிரிவு அதிகாரிகள் மீட்டு உள்ளதாக அறியமுடிகின்றது என்றும் தெரிவித்தார்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor

சிறிசேனவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்

wpengine

நுால் வெளியீட்டுவிழாவில் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் – பைசா் முஸ்தபா

wpengine