பிரதான செய்திகள்

மாகாண தேர்தல் தொகுதி மீள்நிர்ணயத்துக்காக விசேட ஆணைக்குழு

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண ரீதியான புதிய தொகுதிகளை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை நியமிக்கப்படவுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட இந்த குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி பெயரிடுவார்.
அத்துடன் ஏற்கனவே தேசிய எல்லை மீள்நிர்ணயக் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 3 பேர் இந்த விசேட குழுவிற்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி, தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ் 50க்கு50 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காடழிப்புக்கு எதிராக சஜித்,ஹிருணிக்கா கொழும்பில் ஒன்றுகூடல்

wpengine

மாயக்கல்லி மலை புத்தர் சிலை விவகாரம்: குழுவொன்றை அமைக்க கோரிக்கை

wpengine

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.

wpengine