பிரதான செய்திகள்

மஹிந்த பத்து கட்சிகளுடன் கூட்டு ஒப்பந்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் மற்றும் எதிர்கால தேர்தல்களை இலக்கு வைத்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாத ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சி, லங்கா தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, புதிய சிஹல உறும, பூமிபுத்ர கட்சி, ஜனநாயக தேசிய அமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இவ்வாறு தாமரை மொட்டு கட்சியுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளன.

Related posts

“மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம் -”பரிகாரம் பெற்றுத்தருவதாக உறுதி” (படங்கள்)

wpengine

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி.!

Maash

நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் பங்களிப்பது உழைக்கும் மக்களே – ஜனாதிபதி

Editor