பிரதான செய்திகள்

மஹிந்தவுடன் பேச உள்ள மூன்று அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினரை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இதற்காக ஜோன் செனவிரட்ன, அனுரபிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில், மகிந்த அணியினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.

Maash

நிறைவேற்று ஜனாதிபதி முறை – முடிவுக்கு கொண்டுவர தயாராகும் அரசஙகம் மற்றும் எதிர் கட்சியினர்.

Maash

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் மகன் காலமானார்

wpengine