பிரதான செய்திகள்

மருதமுனை மனாரியன்ஸ் 95 ஏற்பாடு செய்த வருடாந்த இரத்த தான முகாம்

மருதமுனை மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இரத்த தான நிகழ்வு நேற்று (24.12.2016 சனிக்கிழமை) கமு/அல்-மானார் மத்திய கல்லூரியில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 3 பெண்கள் அடங்கலாக 79 பேர் இரத்த தானம் செய்து தமது பங்களிப்பினை வழங்கி வைத்தனர்.

சென்ற வருடமும் டிசம்பர் மாதம் மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் இது போன்றதொரு இரத்த தான முகாம் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜை கைது!

Maash

மூவின மக்களும் கௌரவமாக வாழ வேண்டும் வெளிச்சம் கூட்டத்தில் கோத்தபாய

wpengine

சிங்கள தேசப்பற்று பாடலைபப்பாடிய கருணா அம்மான்

wpengine