பிரதான செய்திகள்

மரணிப்போரின் சடலங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டும்

கொராேனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணிப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும் 180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு ஏற்பவும் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களின் படியும் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றதன் படியும் கொவிட்-19 காரணமாக இறந்த ஒரு முஸ்லிம் அடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எமது மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். ஏனெனில் இது எங்கள் விசுவாசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அத்துடன் இறந்தவர்களுக்கு சமூகத்தால் செய்யப்படக் கூடிய ஒரு மார்க்கக் கடமையுயாகும்.


ஆரம்பத்தில் இருந்தே¸ நாங்கள் இந்த விடயத்தை அழகிய முறையில் வலியுறுத்தி வரும் அதேநேரம் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தகவலுக்காக இது தொடர்பாக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


ஆரம்பத்தில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் (jmo) வெளியிடப்பட்ட SOP யில், கொவிட்-19 வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.


எங்களது கோரிக்கையையும் ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு¸ தேவையான மாற்றங்களைச் செய்து¸ அடக்கம் செய்வதற்கான அனுமதியுடன் மார்ச் மாதம் 27 திகதி “கொவிட்-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கையாளுதல் விடயத்தில் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்” ( (Provisional Clinical Practice Guidelines on COVID-19 suspected and confirmed patients) என்ற ஆவணம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.


என்றாலும் துரதிர்ஷ்டவசமாக¸ மார்ச் மாதம் 31ஆம் திகதி மேலே குறிப்பிடப்பட்ட ‘வழிகாட்டல்கள்’ திடீரென திருத்தப்பட்டு எவ்வித விஞ்ஞான ரீதியான காரணங்களும் நியாயங்களும் முன்வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்படுவதற்கான அனுமதி நீக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி¸ இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக எமது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி¸ அடக்கம் செய்வதற்கான அனுமதியளித்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அரசாங்கத்தின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டோம்.


அதைத் தொடர்ந்து¸ அதிகாரிகளுடன் இது சம்பந்தமான விடயங்களை கலந்துரையாட மருத்துவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளுடனான இக்குழுவின் கலந்துரையாடல்களுக்குப் பின் இவ்விடயத்தில் ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்த நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. என்றாலும்¸ அது நடைபெற்றதாக தெரியவில்லை.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில் எப்போதும் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றே எமது சமூகத்தினருக்கு வழிகாட்டியுள்ளது. இந்தச் சூழலில் அதிகாரிகளால் நிர்ப்பந்தமாக மரணித்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் நிலையில் மரணித்தவரின் சாம்பல் கிடைக்கப் பெறும் நிலையில் அது புதைக்கப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது.


மரணித்தவரை தகனம் செய்யும் இந்த முடிவு நமது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது மிகத் தெளிவான விடயமாகும். இந்த விடயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் துறைசார்ந்தவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.


கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும் மற்றும் 180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு ஏற்பவும் மீள் பரிசீலனை செய்யுமாறு தங்களிடம் மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுக்கின்றோம்.


மேலும் அனைத்துவித கட்டாயமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பொலிஸ்¸ பொது சுகாதார அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையுடன் சடலங்களை புதைப்பதற்குரிய அனுமதியையும் வழங்குமாறும் வேண்டிக் கொள்கிறோம். இது முஸ்லிம்களின் மத ரீதியான மற்றும் உணர்வு ரீதியான விடயமாகும்
எனவே இவ்விடயத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். மேலும்¸ 08 அடி ஆழத்தில் கல்லறைத் தோண்டுவது போன்ற, தேவையான அனைத்து விடயங்களையும் முஸ்லிம் சமூகம் செய்ய தயாரிகவுள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தேவைப்பட்டால் கல்லறையை சீமெந்து மூலம் கொன்கிறீட் போடுவது அல்லது வேறேதும் அதனுடன் தொடர் புபட்ட நடவடிக்கைகளை தேவைக்கேற்ப செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்றது.
இது தொடர்பாக நீ ங்கள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

Related posts

நாட்டின் இன்றைய நிலைக்கு 20 க்கு கை தூக்கியோரும் பொறுப்புக் கூற வேண்டும் – இம்ரான் எம்.பி

wpengine

முட்டாள் தினம்: புகைத்தல் மீதான கவர்ச்சி சமூகத்திலிருந்து நீங்கட்டும்!

Editor

முகநூல் நண்பர்களிடம் எச்சரிக்கை! பரிசுதொகை கிடைக்கும்

wpengine