பிரதான செய்திகள்

மன்னார்-எருக்கலம்பிட்டியில் பகுதியில் மஞ்சள் கடத்தல்

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 952 கிலோகிராம் நிறையுடைய மஞ்சள் கட்டி மூட்டைகள் மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.


கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த மஞ்சள் கட்டி மூட்டைகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் மன்னார் – எருக்கலம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

Related posts

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு! (நடந்தது என்ன?) -படங்கள்

wpengine

நிதி அமைச்சர் சப்ரி பதவி விலகியுள்ளார்! இடைக்கால அரசுக்கு ஆதரவுக்காக

wpengine

முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க பௌத்த இனவாத அமைப்புகள் எதிர்ப்பு

wpengine