பிரதான செய்திகள்

மன்னார்,முசலி பகுதியில் 3 கோடி 56 இலட்சம் கேரள கஞ்சா

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு இவை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 356 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும்

wpengine

மட்டக்களப்பு- மயிலந்தனை கிராம மக்கள் குடி நீர் இன்றி மக்கள் அவதி கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள்

wpengine

அந்நியப்படுமா ஐ.தே.க ஐக்கியம்?

wpengine