பிரதான செய்திகள்

மன்னார்,அரிப்பு வீதியில் ஆட்டோ தீக்கரை! பிரதேச சபையின் அசமந்த போக்கு

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு-சிலாபத்துறை பிரதான வீதி அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக இன்று (6) செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் என தீப்பற்றி எறிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு சென்ற போதே திடீர் என தீப்பற்றியதாக தெரிய வருகின்றது.

உடனடியாக குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து தப்பியுள்ளார்.

எனினும் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எறிந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த சிலாபத்துறை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படியான தீ சம்பவங்கள் இடம்பெற்றால் முசலி பிரதேச சபையில் ஒரு தீ அணைப்பு வாகனம் கூட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று மாத காலத்தில் செயற்திறன் அற்ற அரசு என்பதை அது உறுதி செய்துள்ளது.

wpengine

சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் பாலியல் பலாத்காரம் தகுந்த தண்டனைகள் வழங்குவதன் மூலம் சிறந்த பாடம் கற்பிக்கப்படல் வேண்டும்-அமைச்சர் சந்திராணி பண்டார

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும்-வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர்

wpengine