பிரதான செய்திகள்

மன்னாரில் 40வயதிற்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டி! டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

மன்னார் கால்பந்தாட்ட முதுநிலை சங்கத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது மன்னாரில் நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டியானது கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் அதன் இறுதிப் போட்டிகள் மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆறு கழகங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பனங்கட்டுகொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

 

குறித்த இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும், கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியை கொடுத்த ஜனாதிபதி கோத்தாபாய

wpengine

இலங்கையின் மக்கள் தொகை, 21,763,170 -மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்.

Maash

இலங்கையில் 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!

Editor