பிரதான செய்திகள்

மன்னாரில் விஷேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைத்த அமைச்சர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இன்று காலை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதி நவீன வசதிகளுடன் கூடிய ‘நடமாடும் பற்சிகிச்சை சேவை வாகனம்’ ஒன்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து எம்.ரூத்திரன் என்பவரால் வடமாகாண சுகாதாரஅமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த ‘நடமாடும் பற்சிச்சை சேவை வாகனம்’ மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கில் றோயிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது இடம் பெற்ற நிகழ்வில் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட எம்.ரூத்திரன் உள்ளிட்ட அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுகளில் மன்னார் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கில்றோய், மன்னார் வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, வைத்தி நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்படை சிப்பாய் தாக்குதல்! அரிப்பு கிராமத்தில் உள்ள ஆறு பேருக்கு விளக்கமறியல்

wpengine

சாய்ந்தமருது 2வது நாள் போராட்டம் கைது செய்யுங்கள்! சிறைசெல்லவும் தயார்

wpengine

ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லை

wpengine