பிரதான செய்திகள்

மன்னாரில் மூன்று வீட்டினை தாக்கிய இடி,மின்னல்

மன்னாரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் இடி மற்றும் மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டு 3 வீடுகள் சேதமாகியுள்ளன.

மூதூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன.

வீடுகளில் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்தின் பின்னர் மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், பிரதேசச் செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

Related posts

வீட்டின் கேற் வீழ்ந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Editor

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தலில் 9பேரின் பெயர் விபரம்

wpengine

இளவரசி டயானாவின் இறப்பின் இரகசியம் வெளிவந்தது

wpengine