பிரதான செய்திகள்

மன்னாரில் நீர் தடை

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம், இன்று தடைப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கு அமைவாக, மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோகக் குழாய்களின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள், மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8 மணி தொடக்கம் மாலை  5 மணி வரை நீர் துண்டிப்பு அமுலில் இருக்கும் என, மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

தலைமன்னார் கடற்பரப்பில் ஆயிரத்து 57 கிலோ பீடி மற்றும் இலைகள்

wpengine

இந்தியா உதவி! வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் வீதியை புனரமைக்க

wpengine

மன்னாரில் சுகாதார சாரதிகளை சந்தித்த அமைச்சர்

wpengine