பிரதான செய்திகள்

மன்னாரில் ஒன்பது கைக்குண்டுகள் மீட்பு!

மன்னார் – அடம்பன் பெரியமடு பிரதேசத்தில் 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அடம்பன் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

இந்த குண்டுகளானது யுத்த காலத்தில் புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடம்பன் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பெரியமடு – முஸ்லிம் கிராமத்திற்கு அருகில் வைத்து குறித்த குண்டுகளை மீட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பிரதேசத்திலிருந்து புலிகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ராகவன் என்ற பெயர் பொதித்த கைக்குண்டுகள் உள்ளிட்ட 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிளிநொச்சியின் திருவையாற்றில் தொடரும் மணல் கொள்ளை! நடவடிக்கை எடுக்கத் தவறும் பொலிசார்.

wpengine

ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திர முடிச்சு

wpengine

நான் அரசியல்வாதி இல்லை விக்கீ! அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பீர் சம்பந்தன்

wpengine