பிரதான செய்திகள்

மன்னாரில் ஆட்டோ விபத்து

மன்னார் – மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியின் உள் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியபண்டிவிரிச்சான் உள் வீதியில் கட்டுப்பாட்டை மீறி முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி உட்பட முச்சக்கரவண்டி பயணம் செய்த இருவருமே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ஹட்டன் – புளியாவத்த மக்களின் தொடரும் நீருக்கான போராட்டம்

wpengine

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – பிரசன்ன ரனதுங்க!

Editor

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை பெண் நாட்டிற்கு விஜயம்!

Editor