பிரதான செய்திகள்

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

நேற்றைய தினமும் (19) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் எரிவாயு வரிசைகள் காணப்பட்ட நிலையில் சில இடங்களில் வீதிகளை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வத்தேகம உடுதலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த அந்த நபர், மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் ,உயர் ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

wpengine

சம்பந்தன் அவர்களே! முஸ்லிம் தலைவர்களின் பலவீனத்தைக்கொண்டு இலக்கை அடையப் பார்க்கிறீர்கள்.

wpengine

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்ற இருவர் கைது.! கிளிநொச்சியில் சம்பவம்.

Maash