பிரதான செய்திகள்

மக்களின் அபிலாசைகளை வெற்ற தலைவர் அமைச்சர் றிஷாட்

மக்களின் அபிலாசைகளை வெல்வதற்காக ரிசாட் பதியுதீன் பல மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டை மேற்கொண்டு உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.

கந்தளாயில் நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில்,

சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுகபோகங்களை அனுபவித்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் தகுந்த பாடத்தினை காட்டுவதற்கான காலம் வந்துள்ளது.

இதேவேளை கந்தளாய் பிரதேசசபைக்கு இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முசலி மீள்குடியேற்றத்துக்கான பிரச்சினை அடிப்படை காரணம் என்ன?அமைச்சர் றிசாத் அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்வு!

wpengine

சாய்ந்தமருதில் இயங்கி வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றம்

wpengine

ஞானசாரர் மீது கை வைத்தால் நடப்பது வேறு, நாடே கொந்தளிக்கும்

wpengine