செய்திகள்பிரதான செய்திகள்

போலி 5000 ரூபாய் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற பெண் கைது..!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற ஒரு பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23)கைது செய்யப்பட்டார்.

அம்பலாந்தோட்டை, பெரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், 8,000 ரூபாய் அபராதத்தை செலுத்தும் போது, ​​மற்ற நாணயத்தாள்களுடன் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றையும் கையளித்துள்ளார்.

நீதிமன்ற காசாளர் போலி நாணயத்தை அடையாளம் கண்டு, நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தப் பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related posts

மன்னார்- அளவக்கை சிறுக்குளம் கிராமத்தில் இஸ்லாமிய நிலையத் திறப்பு நிகழ்வு

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine

நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு அநீதி! அமீர் அலி நடவடிக்கை

wpengine