பிரதான செய்திகள்

போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தப்பியோடிய கைதிகளில் 6 பேர் கைது!

பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் 06 பேர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று (17) காலை இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டதாகவும், இரவு வேளையில் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரும் கந்தகெட்டிய வெள்ளவத்தென்ன பிரதேசத்தில் பதுங்கி இருந்ததாகவும், அவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மட்டக்குளி மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இன்று (18) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தப்பியோடிய மேலும் மூன்று கைதிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

Editor

புத்தளம் காஸிமிய்யாவின் குறைபாடுகளை நிவர்த்தித்துத் தருமாறு முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்.

wpengine

ராஜபஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! 17 பேர் கையொப்பம்

wpengine