பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுவாக அமெரிக்காவை சந்தித்த அனுரகுமார

நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய அனுரகுமார திசாநாயக்க

இச்சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தமது ருவிட்டர் செய்தியில் தெரிவித்ததாவது,

“பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். இன்று நான் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தேன். இதன்போது இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது” என தெரிவித்துள்ளார். 

Related posts

சாய்ந்தமருது பிரதேச சபை! பேரினவாதிகளின் அழுத்தம்

wpengine

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தொடர்கிறது; இதுவரை 05 பேர் பலி

wpengine

இந்தோனேசியாவில் தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்!

Editor