செய்திகள்பிரதான செய்திகள்

பொரளையில் துப்பாக்கி சூடு, சுட்டவர் மற்றும் சுடுபட்டவர் தப்பியோட்டம்..!

பொரளையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பிச் சென்றதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, மேலும் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமருக்கு, 13 வயது சிறுவன் அம்மார் ரிஷாதின் உருக்கமான வேண்டுகோள்

wpengine

மன்னார் பகுதியில் 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

Maash

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி அமைச்சர் றிஷாட்

wpengine