பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை  (Galagoda Aththe Gnanasara Thero) வரவேற்கும் துண்டுப்பிரசுரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம் என்ற துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தில்  பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் வடக்கிற்கான பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் 21.11.21 இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாளை 22.11.21 முல்லைத்தீவு ,கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பயணங்களை மேற்கொண்டு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ள நிலையில் வன்னித்தமிழ் இளைஞர்கழகம் வரவேற்று துண்டு பிரசுரங்களை ஒட்டிவைத்துள்ளதுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய இராணவத்தினர் கடமையில் நிற்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine

ரணிலின் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்

wpengine

பொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்? ரிஷாட்!

wpengine