பிரதான செய்திகள்

பேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதிய இளம் ஆசிரியர் இடமாற்றம்

தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் கவிதை பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் இளம் ஆசிரியர் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவசியத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இது ஒரு பழிவாங்கும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர், அந்த பாடசாலையின் நிர்வாகம் குறித்து பல முறை கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அவ்வாறு கூறிய போதிலும், இந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் சிறுவயது முதலே கவிதை எழுதும் பழக்கம் கொண்டவராகும். மிகவும் திறமையான இந்த ஆசிரியர் தான் எழுதிய கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த கவிதைகளுக்குள் பாடசாலை நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் கவிதை ஒன்றிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவை அனைத்தும் போலியான தகவல் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தோற்றளர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ்?

Editor

95 குழந்தைகளை பழி கொடுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி

wpengine

துப்பாக்கிச் சூடு சம்பவம், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள போலீசார்.

Maash