தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 1100 முறைப்பாடுகள்

பேஸ்புக் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பில் 1,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்ற புகைப்படங்களை நண்பர்கள் மாத்திரம் பார்வையிடக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்வதன் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தமிழர்களால் தாயகத்தில் நடாத்தவிருக்கும் எழுகதமிழ் நிகழ்வு

wpengine

கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள், மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு.!

Maash

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

wpengine