தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் தடை மீண்டும் நீக்கம்

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாடு முழுவதும், சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்து.

சட்டவிரோதமான முறையில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை நீக்கம் தொடர்பான தீர்மானத்தினை எடுத்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலுக்கு தடையுத்தரவு!

Editor

கிளிநொச்சியில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Maash

சிறந்த கல்வி முறைமையை கட்டமைக்க அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும். -ஜனாதிபதி-

Editor