தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

மக்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வு இல்லாமையே இவ்வாறான மோசடி இடம்பெற காரணம் என தெரியவருகிறது.

இது தொடர்பில் பொலிஸாரும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மாகாண தேர்தல் தொகுதி மீள்நிர்ணயத்துக்காக விசேட ஆணைக்குழு

wpengine

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

wpengine

கூட்டமைப்புக்காக அரசியல் செய்யப்போகும் மன்னார் ஆயர்

wpengine