பிரதான செய்திகள்

பெப்ரல் அமைப்புக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிப்பு

எதிர்வரும் 17 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடனான அறிக்கையொன்றை கையளிப்பதற்கு அசோக்க பீரிஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அதனால் குறித்த அறிக்கை தமக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

அந்த அறிக்கை கிடைத்த மாத்திரத்தில் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக அனைத்து பிரச்சினைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் எனவும், அவ்வாறு நிறைவேறாவிட்டால் துறைசார்ந்த அமைச்சருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் என நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்திருந்தது.

அந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாவே அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த பதிலை அளித்துள்ளார்.

Related posts

உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கிய அ. ஸ்ரான்லி டி மெல்

wpengine

பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்கான தடுப்பூசி! சீன விஞ்சானிகளின் சாதனை . !

Maash

மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டாம்! வீதிக்கு வந்த பெண்கள்

wpengine