பிரதான செய்திகள்

புத்தளம் குவைத் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பரிசோதனை முகாம்

(அனா)
கண்னில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களுக்கு கண் வில்லை பொருத்துவதற்காக அவர்களை பரிசோதிக்கும் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் “மரியம் கிராமத்தில்” இடம்பெற்றது.


புத்தளம் குவைத் வைத்தியசாலையின் அனுசரனையில் இடம்பெற்ற கண் பரிசோதனை முகாமில் குவைத் வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் கலந்து கொண்டு கண்னில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை பரிசோதனை செய்தனர்.unnamed

கண்னில் வெள்ளை படர்தல் நோய் உள்ள அறுபத்தைந்து பேர் பரிசோதனை செய்யப்பட்ட போதும் இவர்களில் இருந்து இருபத்திநாலு பேருக்கு கண் வில்லை பொருத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான கண் வில்லைகள் இரண்டு வாரத்தில் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவசமாக பொருத்தப்படும் என்று ஏற்பாட்டாளர் மௌலவி ஏ.நஜீம் மேலும் தெரிவித்தார்.unnamed-2

Related posts

புத்தளத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 4பேர் காயம்! முன்று ஆசிரியர்கள்

wpengine

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

wpengine

International Mother Language Day 21 at Minister Mano Ganesh and Bangadesh Higher chief guest

wpengine