செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளத்தில் ரத்தகாயங்களுடன் வீதியில் ஓடிய மனைவியும் மகளும், வைத்தியசாலை அனுமதித்தபின் மனைவி மரணம்.

புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

சம்பளம்,ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை

wpengine

பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine

தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம்

wpengine