பிரதான செய்திகள்

புத்தளத்தின் பல பகுதிகளிலும் வௌ்ளம்: மன்னார் வரையான பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் இதுவரையும் வடிந்தோடாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளனது.

எழுவான்குளம் பகுதியே வௌ்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அந்தப் பகுதி மக்கள் எழுவான்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள விகாரையில் தங்கியுள்ளனர்.

புத்தளம் – மன்னார் செல்லும் ஓயா மடுவ வீதி மற்றும் மரிச்சிகட்டி  வீதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன் சில கிராமப்புற வீதிகளிலும் வெள்ள நீர் பாய்ந்து செல்வதினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Related posts

எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Maash

ஞானசார தேரரின் செயலணியில் இருந்து அஸீஸ் நிசாருதீன் விலகினார்.

wpengine

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine