பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு! வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியது.

யாழ். வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சாவகச்சேரி – தனங்கிளப்பு, அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Related posts

மன்னார், சிலாவத்துறை, சவுத்பார் பகுதியில் கைதான மீனவர்கள்

wpengine

தமிழ் – முஸ்லிம் உறவினை மேலும் வலுவூட்ட வேண்டும் -ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கான முயற்சி – சிராஸ் மீராசாஹிப்

wpengine