பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று,  ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

மண்முனைப்பற்று, ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவர்களுமான அலி சாஹிர் மௌலானா மற்றும் சிறிநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் தெரிவித்தார்.

Related posts

புதிய திட்டங்களை முன்வைக்கும் அளவுக்கு அதிக அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை .

Maash

இலங்கை அணிக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து செய்தி

wpengine

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு

wpengine