பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

திறப்பனை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முரியாக்கடவளை வட்டாரத்திலிருந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய முஜிபுர் ரஹ்மான் மற்றும் லபுநோருவ வட்டாரத்திலிருந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய மரியா லியனகே ஆகியோர் இன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

குறித்த இந்த நிகழ்வில் கட்சியின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வுகள் ஆரம்பிக்கும் தினத்திலிருந்து தனது சேவைகள் தொடரும் என்றும், தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு ஓர் சேவகனாக இருந்து பிரதேச குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய மூச்சாய் நின்று பாடு படுவேன் என்றும் இந்நிகழ்வில் உரையாற்றிய திறப்பனை பிரதேச சபைக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள முஜிபுர்ரஹ்மான் தெரிவித்தார்.

Related posts

தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பெற்றவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் – கல்வி அமைச்சு நடவடிக்கை .

Maash

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

wpengine

சைக்கில் ஓடிய 5 வயது சிறுவன் மயக்கம் : வைத்தியசாலையில் மரணம்..!

Maash