செய்திகள்பிரதான செய்திகள்

பஸ் மிதிபலகையில் பயணித்து தவறி விழுந்து படுகாயமடைந்தவர் மரணம் .!

புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

26 ஒசுசல அரச மருந்தகங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபா நஷ்டம்!

Editor

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அமைச்சர் றிஷாட்டின் அணியுடன் இணைவு

wpengine

உழவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

wpengine