பிரதான செய்திகள்

பல்கலை மாணவர்களை தாக்கிய நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 15 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து புதிய மாணவர்களைத் தாக்கி காயப்படுத்தியதற்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெஹிவளை, மொரட்டுவ, அம்பலாங்கொட மற்றும் வெலிமடை பிரதேசங்களைச் சேர்ந்த 23, 24 மற்றும் 25 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (29) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

77 முஸ்லிம் குடும்பங்கள் காணி உரிமை கோரி முல்லைத்தீவில் போராட்டம்! அமைச்சர் றிஷாட் சந்திப்பு

wpengine

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது ஹக்கீமின் அறிவிப்பு- ஹிஸ்புல்லாஹ்

wpengine

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

wpengine