பிரதான செய்திகள்

பலசரக்கு தூள் சார் உற்பத்திகள் சந்தைப்படுத்தல் கிளையை பார்வையட்டேன்; நாடு முழுவதும் பரவலாக்கத் தட்டம்:

“பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின்” மாதிவெல கிளையை நான் பார்வையிட்டேன்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்துக்காக மீமுரே பிரதேசத்துக்கு நான் சென்றிருந்த போது, அந்த பிரதேச மக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விற்பனைச் சபையை மீண்டும் செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்திருந்தேன்.

அதன்படி, தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான தீர்வாக கடந்த ஓகஸ்ட் மாதம் பலசரக்கு சந்தைப்படுத்தல் சபை நிறுவப்பட்டது.

1972ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம், இதுவரை காலமும் ஆவணத்துக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட செயலற்ற நிறுவனமாகவே இருந்தது.

விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச விலை, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவது போன்று,

தரமான பலசரக்குத் தூள்கள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை வழங்குதல்,

சந்தை ஆராய்ச்சி, ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவத் தரத்தைப் பேணுவது உள்ளிட்ட –

பல நோக்கங்களுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்த்துள்ளது.

பத்தரமுல்ல, மாதிவெல, நுகேகொட, பம்பஹின்ன, இரத்தினபுரி, கலவான, கிரிஎல்ல, கொடாமுல்ல மற்றும் பல்லேபெத்த ஆகிய நகரங்களில் நான்கு மாத குறுகிய காலப்பகுதியில் 10 கிளைகளை பலசரக்குச் சந்தைப்படுத்தல் சபை நிறுவியுள்ளது.

இதன் 11ஆவது கிளை எதிர்வரும் 31ஆம் திகதி செவனகல நகரில் திறக்கப்படவுள்ளது.

நைஜீரியா, பிரான்ஸ், ரஷ்யா, கலிபோர்னியா, பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உள்ளூர் பலசரக்குப் பொருட்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏற்கெனவே கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

தற்போது, மாதமொன்றுக்கு இருபது மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதோடு, பலசரக்குச் சந்தைப்படுத்தல் சபையானது, எதிர்காலத்தில் நாடு முழுவதும் அதன் கிளை வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரத்தை பலப்படுத்த நாம் தயாராக உள்ளோம் வவுனியா நிகழ்வில் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் அறிவிப்பு

wpengine

மன்னார் பிரதான வீதி, வீதி அபிருத்தி அதிகாரசபையினால் சீரற்ற முறையில் சீர் செய்யப்படுவதாக மக்கள் விசனம்.

Maash

இன்று முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

wpengine