பிரதான செய்திகள்

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்தும் 46 பேர் இந்த பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான ஜகத் சுமதிபாலவும் உள்ளடங்கியுள்ளார்.

அத்துடன் உரிமையாளர்களின் பெயர் வெளியிடப்படாத மூன்று நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

இலவச உம்றா திட்டம் 2ஆம் குழு நாளை பயணம்! அமைச்சர் ஹலீம், ஹிஸ்புல்லாஹ் வழியனுப்பி வைப்பு

wpengine

20க்கு இருபது உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்

wpengine

மே18 அன்று முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது..? ஒரு சூடான சிறப்பு பார்வை!

wpengine