பிரதான செய்திகள்

பதியுதீனுடன் அரசாங்கத்துடன் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை விஷேட அறிவித்தலொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,


நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் நடந்ததைப் போல, மக்களை கைது செய்யும் அல்லது விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க நாம் தயாராக இல்லை.


அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் விடும் குறைபாடுகள் அல்லது தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் அரசாங்கத்துடன் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.


நாட்டு மக்கள் எம்மீது இதுவரை வைத்திருந்த நம்பிக்கை வீணாகாமல் அதனை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

Related posts

இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.!

wpengine

எமது அனுமதியின்றி கிழக்கு மாகாண சபையைக் கலைக்க முடியாது

wpengine

வாகன மோசடி! முசம்மில் நிதி மோசடி விசாரணை பிரிவில்

wpengine