பிரதான செய்திகள்

பண மோசடி தொடர்பில் முன்னாள் மாநகர சபை பெண் உறுப்பினர் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கிடைக்கப் பெற்ற 11 முறைப்பாடுகளையடுத்து  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி அவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய விக்னேஸ்வரன்

wpengine

பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை

Maash

சட்ட ஒழுங்குகள் அமைச்சு சரத் பொன்சேகா வசம்? நாளை முக்கிய அறிவிப்பு

wpengine