பிரதான செய்திகள்

படித்தவர்கள் திடசங்கட்பத்துடன், ஆத்மசுத்தியுடன் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

படித்தவர்கள் சம்பளம் போதாது எனக் கூறி, வெளிநாடுகளுக்கு செல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு  தும்முல்ல ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மாளிகையில் இன்று நடைபெற்ற அரச சேவை பொறியியலாளர்கள் சங்கத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள படித்தவர்கள், புத்திஜீவிகள் அனைவருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அழைப்பு விடுப்பதாகவும் திடசங்கட்பத்துடன், ஆத்மசுத்தியுடன் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சீனாவில் தாயின் மாற்று கருப்பை மூலம் குழந்தை

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை பார்க்க சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபம்

wpengine

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

wpengine