பிரதான செய்திகள்

நுண்நிதிக் கடன் நிறுவனங்களை மூடிவிட வேண்டும்! வட்டி வீதம் குறைக்க நடவடிக்கை

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.


அந்த நிறுவனங்களில் கடன் பெறும் நபர்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


அதற்கமைய கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டு மாற்றம் தொடர்பில் அரசாங்கம் கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எப்படியிருப்பினும் இவ்வாறான நுண்நிதிக் கடன் நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


தற்போது குறித்த நிதி நிறுவனம் ஊடாக அறவிடப்படும் அதிக வட்டியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு வெகு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

wpengine

இலங்கை முதலீட்டிற்கு உகந்த இடம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர் அலோ பிளெக் (Aloe Blacc) தெரிவிப்பு .

Maash

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

wpengine