பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை

மன்னார் பஸ் தரிப்பிட பகுதியில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாது சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகளுக்கு, நாளை (28)  முதல் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாதென, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில் வைத்து, இன்று (27) காலை, மன்னார் மாவட்ட தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் மன்னார் பஸ் தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ  சாரதிகள் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மாற்றுவலுவுடையோருக்காக உள்ளூர் மோட்டார் வாகனங்களுக்கான பதிவு, மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்.

Maash

வெளிநாட்டு பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டம்! நியமனம் வழங்கவும்.

wpengine

IMF மீளாய்வு வரை எந்த மாற்றமும் கிடையாது!-ஷெஹான் சேமசிங்க-

Editor