பிரதான செய்திகள்

நாளை புதிய அமைச்சரவை கூடட்டம்

புத்தாண்டில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்றப் பின்னர், கடந்த 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதுடன் அது 20 நிமிடங்களுக்குள் முடிவடைந்தது.
அந்த நேரத்தில் அமைச்சர்களுக்கான துறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும் இடையில் துறைகள் சம்பந்தமான இழுபறி நிலை காணப்படும் சூழலில் நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்திய கர்நாடக பிரஜைகள் 12 பேர் -காத்தான்குடியில் பொலிசாரால் கைது- பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளும் மீட்பு

wpengine

டலஸ் , உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன மற்றும் விமல் உள்ளிட்டவர்களுக்கு தடை

wpengine

வெளிநாட்டு கடன் 1700 பில்லின்! அரசாங்கத்தால் தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலை

wpengine