பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்த முயற்சி – அனுரகுமார திஸாநாயக்க

நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்பட இடம்கொடுக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற சோசலிச இளைஞர் சங்கத்தின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் ஒரு முறை பின்நோக்கி கொண்டு செல்ல இடமளிக்கப் போவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும்

wpengine

ஆறாம் திகதி விடுமுறை தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் விசேடஅறிவிப்பு .

Maash

11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளது! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

wpengine